'கூட படிக்குற மாணவியை பார்க்க போன மாணவன்...' 'பிடித்து கல்யாணம் செய்து வைத்த உறவினர்கள்...' - அதிரடி 'நடவடிக்கை' எடுத்த போலீசார்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Dec 15, 2021 04:18 PM

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே சிறுவன்- சிறுமிக்கு நள்ளிரவில் திருமணம் செய்து வைத்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Relatives arrested for marrying school children in Thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 17 வயது மாணவனும்,16 வயது மாணவியும் படித்து வருகின்றனர்.

ஒரே பள்ளியில் பயிலும் அவர்கள் நட்பாக பழகி வந்தனர். இந்த நிலையில் மாணவியை அவரது சொந்த ஊருக்கு சென்று மாணவன் பார்த்துள்ளார். மாணவன் வருவதை முன்கூட்டியே அறிந்துக்கொண்ட மாணவியின் உறவினர்கள், ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, மணக்கோலத்தில் கோயிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். ஏற்கனவே அந்த மாணவனை உறவினர்கள் மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக் குழந்தைகளுக்கு திருமணம் செய்த வைத்தது குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர், அக்கரைவட்டத்தை சேர்ந்த ராஜா, அய்யாவு, ராமன், நாடிமுத்து, கோபு, கண்ணையன் ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர்.

மேலும், ஒரு நபரை தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைத் திருமண தடுப்பு மற்றும் கட்டாய திருமணச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : #SCHOOL CHILDREN #MARRIAGE #THANJAVUR #தஞ்சாவூர் #பள்ளி மாணவர்கள் #திருமணம்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Relatives arrested for marrying school children in Thanjavur | Tamil Nadu News.