darbar USA others

நண்பர்களுடன்... சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை... சுற்றிப் பார்க்க சென்ற... இன்ஜீனியரிங் மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 13, 2020 02:10 PM

சென்னை பெசன்ட் நகரில் உள்ள கடலில் குளித்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

private engineering students died after drowning in beach

சென்னை சத்தியபாமா கல்லூரியில் நரசிம்மா, கோகுல், அருண்குமார் ஆகிய மூன்று மாணவர்கள் பொறியியல் படித்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பெசன்ட் நகர் கடற்கரையை சுற்றிப் பார்க்க மாணவர்கள் வந்தனர். அப்போது கடலில் குளிக்க ஆசைப்பட்டு, கடல் நீரில் கோகுல் மற்றும் நரசிம்மா விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த ராட்சத அலை, மாணவர்களை கடலின் உள்ளே இழுத்துச் சென்றது.

இதில் இருவரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இதனைப் பார்த்து அவர்களது நண்பர் துடித்துப் போனார். இதையடுத்து மாணவர்கள் இருவரின் உடல்களையும் மீனவர்கள் உதவியுடன் போலீசார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சாஸ்திரி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #BEACH #CHENNAI #BESANT #NAGAR #ENGINEERING #STUDENTS #பொறியியல் கல்லூரி மாணவர்கள் #சென்னை