‘மகள் கல்யாணத்துக்காக சேர்த்து வச்சது’.. ‘இப்படி பண்ணிட்டாங்களே’.. கதறி அழுத தாய்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 09, 2021 09:37 AM

மகளின் திருமணத்துக்காக வீட்டில் வைத்திருந்த நகைகள் திருடுபோனதைக் கண்டு தாய் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mysterious persons steal gold, money at home

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த விளநகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவர் வெளிநாட்டில் பொறியாளராக வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மனைவி ராஜேஷ்வரி தனது இரண்டு மகள்களுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று உறவினர் ஒருவரது வீட்டுக்குச் செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு மூவரும் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து காலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஷ்வரி உடனே வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 100 சவரன் நகை மற்றும் 8 லட்சம் ரூபாய் பணம் திருட்டுப் போயுள்ளது தெரியவந்துள்ளது. மூத்த மகளின் திருமணத்துக்காக வங்கியில் இருந்து எடுத்துவந்த பணம் மற்றும் நகைகள் திருடுபோய்விட்டதே எனக் கூறி தாய் ராஜேஷ்வரி கதறி அழுதார். இந்த நிலையில் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mysterious persons steal gold, money at home | Tamil Nadu News.