'மீண்டும் ஜூன் 15-ம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு'... 'பரபரப்பான மக்கள்'... உண்மை நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 11, 2020 11:41 AM

நாடு முழுவதும் மீண்டும் ஜூன் 15-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், அதன் உண்மை நிலவரம் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

Fact Check: No, Zee News Bulletin Did Not Claim to Another Lockdown

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் 5 வது கட்ட  ஊரடங்கில், நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசின் உத்தரவுப்படி உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, கால் டாக்ஸி, ஆட்டோ ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. பெரிய அளவிலான கடைகள், மத வழிபாட்டுத் தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது. வட மாநிலத்தின் பிரபல ஹிந்தி செய்தி நிறுவனத்தின் தலைப்பு செய்தியுடன் கூடிய ஊரடங்கு குறித்த புகைப்படம் வெளியானது. சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து மத்திய அரசு மீண்டும் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. விமானம் மற்றும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அந்த செய்தி போலியானது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. விஷமிகள் சிலர் ஹிந்தி செய்தி நிறுவனத்தின் புகைப்படத்தை மாற்றி வெளியிட்டுள்ளார்கள். இதன் மூலம் மத்திய அரசு ஊரடங்கு குறித்து எந்த ஒரு உத்தரவும் வெளியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

உள்நாட்டு விமானச் சேவை மற்றும் ரயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த செய்தி போலியானது எனத் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fact Check: No, Zee News Bulletin Did Not Claim to Another Lockdown | Tamil Nadu News.