legend updated

‘பலமா ஓங்கி அடிச்சேன்’... ‘மயங்கி விழுந்துட்டா’... 'காதலன் செய்த அதிர்ச்சி காரியம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 02, 2019 06:10 PM

கல்லூரி மாணவியை கடத்தி கொலை செய்துவிட்டு, காதலன் வேறொருப் பெண்ணை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

college student kidnapped and killed by her lover in Dindigul

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கேத்தம்பட்டியை சேர்ந்தவர் ஓட்டல் தொழிலாளியான பாண்டி என்ற வீரமலை. இவருடைய 19 வயதான மகள் முத்தரசி, நவாமரத்துப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அவருடைய அக்காள் தமிழரசி, திருமணமாகி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஆத்துக்கால்புதூரில் வசித்து வருகிறார். தனது அக்காள் வீட்டிற்கு அடிக்கடி முத்தரசி சென்று வந்தார். அப்போது ஆத்துக்கால்புதூரை சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் பரத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளாடைவில் காதலாக மலர்ந்தது. 

இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திடீரென முத்தரசி மாயமானார். இதை தொடர்ந்து முத்தரசியை அவரது பெற்றோர், உறவினர்கள் தேடினர். இது குறித்து முத்தரசியின் அக்காள் தமிழரசி, வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக கூறிதால், போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். அதில் முத்தரசியை, பரத் கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. திருமண ஆசைகாட்டி முத்தரசியை கடத்தி சென்ற பரத் ஆத்துக்கால்புதூரில் தனியாக ஒரு வீடு எடுத்து குடிவைத்திருந்தார்.

சில நாட்களிலேயே 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் ஒருநாள் பரத், தனது வாகனத்தில் முத்தரசியை தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்து சென்று பேசிக்கொண்டிருந்தார். அபப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பரத், முத்தரசியை பலமாக ஓங்கி அடித்ததாக தெரிகிறது. இதில் முத்தரசி அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பரத், என்ன செய்வது என்று தெரியாமல், முத்தரசியை வாகனத்தில் எடுத்துக்கொண்டு,தனது வீட்டுக்கு வந்து விட்டார். இதனைக் கண்டு பதறிய பரத்தின் குடும்பத்தினர், வெளியில் தெரியாமல் இருப்பதற்காக வீட்டின் பின்புறத்தில் முத்தரசியின் உடலை புதைத்து விட்டனர்.

அதன்பிறகு வீராட்சி மங்கலத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணை பரத்துக்கு நிச்சயம் செய்தனர். திருமண காரியம் நடக்கும் போது, வீட்டில் பிணம் புதைக்கப்பட்டிருப்பது, குடும்பத்திற்கு நல்லதல்ல என்று பாரத்தின் பெற்றோர் கருதினர். இதனால் திருமணத்திற்கு முன்பு, முத்தரசியின் உடலை தோண்டி எடுத்து அருகே உள்ள பொட்டல் காட்டிற்கு கொண்டு சென்று எரித்தனர். அதன்பின்னர் 2-வதாக நிச்சயம் செய்த பெண்ணை, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பரத்துக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். தற்போது பரத், அவரது தாய் மற்றும் உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags : #MURDER