'அன்னைக்கு ராத்திரி... நானும் 'அவளும்' ஒன்னா தான் சரக்கு அடிச்சோம்!.. மட்டையாறதுக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி'... 55 வயது பெண்ணின் கள்ளக்காதலன் வெறிச்செயல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jul 13, 2020 05:05 PM

மதுபோதை தகராறில் பெண்ணை அடித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

chennai velachery crime drunkard man kills woman affair

வேளச்சேரி அண்ணாநகர் 5வது பிரதான சாலை நடைபாதையில், கடந்த 10ம் தேதி மதியம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் தலையில் படுகாயங்களுடன் கிடந்தார். அப்பகுதியினர், அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடததினர். அதில், இறந்தவர் பெயர் செல்வி (55) என்பதும், வேளச்சேரி அண்ணாநகர் பிரதான சாலை நடைபாதையில் வசித்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

பழைய பொருட்களை பொறுக்கி விற்பனை செய்து வந்த செல்வி, பரணிதரன் (40) என்பவருடன் வசித்துள்ளார். அவரை பிடித்து விசாரித்தபோது, செல்வியுடன் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்ததாக தெரிவித்தார். இவர்கள், இரவில் ஒன்றாக மது அருந்துவார்களாம். கடந்த 9ம் தேதி இரவு மது அருந்தியபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பரணிதரன், அங்கிருந்த உருட்டுக் கட்டையால் செல்வியை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதில், படுகாயமடைந்த செல்வி இறந்துவிட்டார். இதன் அடிப்படையில், கொலை வழக்குப்பதிவு செய்து, பரணிதரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai velachery crime drunkard man kills woman affair | Tamil Nadu News.