'முதல் தேர்தலிலேயே இவ்வளவு வாக்குகளா'!?.. 'சென்னை தமிழச்சி பத்மபிரியாவின் அரசியல் எதிர்காலம் என்ன'?.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி முடிவு!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | May 03, 2021 04:41 PM

மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியா பெற்ற வாக்குகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

chennai tamizhachi padmapriya makkal needhi maiam maduravoyal

மதுரவாயல் தொகுதியில் அதிமுக அமைச்சர் பெஞ்சமின் போட்டியிட்டார். ஆனால் அதைக் காட்டிலும் சென்னை தமிழச்சி பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டதால் ஸ்டார் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது. இதனால் மதுரவாயல் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. திமுக சார்பில் காரப்பாக்கம் கணபதி போட்டியிட்டார்.

நேற்று காலை 8 மணி தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் அமைச்சர் பெஞ்சமினும் பத்மபிரியாவும் பின்னடைவிலேயே இருந்தனர். காரப்பாக்கம் கணபதி மட்டுமே முன்னிலையில் இருந்து வந்தார். பிறகு அனைத்துச் சுற்று வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், அமைச்சர் பெஞ்சமினை வீழ்த்தி திமுக வேட்பாளர் கணபதி 31 ஆயிரத்து 231 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட்ட பத்மபிரியா 33,401 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். இது, அந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 12.2 சதவீதமாகும். நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட கணேஷ் குமார் 21,045 வாக்குகள் பெற்று 4வது இடம் பிடித்தார்.

மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளானது, அந்த தொகுதியில் அமைச்சர் பெஞ்சமினின் வெற்றியை தடுத்து நிறுத்தியுள்ளது. அவர் மொத்தமாக 89,577 வாக்குகளை பெற்றிருக்கிறார்.

ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி, 1,21,298 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கிடையே, தேர்தல் முடிவுகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பத்மபிரியா, "நாம் (மக்கள் நீதி மய்யம்) மிகக் கடுமையான ஒரு போட்டியை இந்த தேர்தலில் சந்தித்தோம். மக்கள் நீதி மய்யத்தின் மதுரவாயல் வேட்பாளராக என்னுடைய முதல் தேர்தலில் சுமார் 33 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளேன்.

இந்த தேர்தல் களத்தில் எனக்கு ஆதரவாக இருந்த மக்கள், அதிகாரிகள், ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த தேர்தலை முழு மூச்சோடு எதிர்கொண்டேன். மேலும், இதில் எனக்கு துணையாக இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி. இது ஒரு நீண்ட அரசியல் பயணத்தின் ஆரம்பம் மட்டுமே" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai tamizhachi padmapriya makkal needhi maiam maduravoyal | Tamil Nadu News.