'இந்த 9 மாவட்டங்களுக்கு கனமழை...' சென்னையில் மழை பெய்யுமா...? வானிலை ஆய்வு மையம் தகவல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 11, 2020 03:12 PM

கோடை காலங்களில் வரும் வெப்ப சலனத்தால் வரும்  2 நாட்களுக்குள் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று குளிர்விக்கும் செய்தியை அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

Chennai Meteorological Dept predicts heavy rain in 9 districts

தமிழகத்தின் சில மாவட்டங்களில்வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, , திருவாரூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம்,  ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோடைகாலத்தில் மழை வரும் என்ற செய்தி ஒரு சில மாவட்டங்களை குளிவித்தாலும் சென்னை அந்த பட்டியலில் இல்லை. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்ப நிலை அதிபட்சமாக 37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என அறிவித்துள்ளனர்.

குமரிக்கடல் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசக் கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.என அறிவித்துள்ளது சென்னை வானிலை மையம்.

மேலும் வேலூர், கரூர், மதுரை, திருச்சி, சேலம், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும், அதனால் வரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11. 30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் அந்தமான்-நிகோபார் பகுதியில் வரும் பதினாறாம் தேதி தென்மேற்கு பருவக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் அன்றே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : #RAIN