திண்டுக்கல் இனி சுவிட்சர்லாந்து... மன்சூர் அலிகானின் நூதனப் பிரச்சாரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 09, 2019 12:46 PM

'மக்களவைத் தேர்தலில் வெற்றிப்பெற்றால் திண்டுக்கல் தொகுதி சுவிட்சர்லாந்து போல் ஆகிவிடும்' என்று நடிகர் மன்சூர் அலிகான் நூதனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

actor mansoor ali khan gives numerous promises in dindigul

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். இவர், தினம் தினம் ஒரு யுக்தியில் பிரச்சாரம் செய்து தொகுதி மக்களை ஈர்த்து வருகிறார்.

வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தொகுதிக்குள் சென்று களப்பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். அப்போது முதலே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிலேயே மிக முக்கியமான வேட்பாளராக இவர் தன்னை முன்னிறுத்தி வருகிறார்.

நூதனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மன்சூர் அலிகான், 'ஊழல் நிறைந்த கட்சிகள் தான் கூட்டணி வைத்துள்ளன. நாங்கள் தனித்தே போட்டியிட்டு வெற்றிபெறுவோம்' என்று கூறியுள்ளார். மேலும் அவர் நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியினை இங்குக் காணலாம்.

Tags : #MANSOORALIKHAN #DINDIGUL #ADMK #DMK #PROMISES