விஷ வாயு தாக்கி 4 பேர் பலி - தூத்துக்குடியில் நடந்த சோக சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 02, 2020 03:04 PM

நேற்றைய தினம் நெய்வேலி என்.எல்.சியில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த நிலையில், தூத்துக்குடியில் விஷய வாயு தாக்கி 4 பேர் அடுத்தடுத்து பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. (இணைப்பில் உள்ள படம்: மாதிரி படம்).

4 dead poisonous gas leakage septic tank cleaning thoothukudi

தூத்துக்குடி செக்காரக்குடி பகுதியில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் இன்று சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.  அவர்கள் கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்தபோது தொட்டிக்குள் இருந்து திடீரென விஷ வாயு வெளிப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை சுவாசித்த தொழிலாளர்கள் 4 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதுபற்றி அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  முதற்கட்டமாக உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 4 dead poisonous gas leakage septic tank cleaning thoothukudi | Tamil Nadu News.