‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த’... ‘அடுத்தடுத்து ஊரடங்கை தானாகவே’... ‘நீட்டிக்கும் மாநிலங்கள்’... 'மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்த அரசு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 10, 2020 08:50 PM

ஒடிசா மாநிலத்தை தொடர்ந்து பஞ்சாபிலும் ஊரடங்கு மே மாதம் 1- ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Punjab extends lockdown curfew in the state till May 1st

கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற மே 1-ஆம் தேதி வரை மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ஒடிஸாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மே 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 பேர் பலியாகினர். அதேசமயம் கொரோனா பாதிப்பில் இருந்து 4 பேர் குணமடைந்தனர்.