IndParty

'இப்படி ஒரு சம்பவம் நடக்க போகுதுன்னு...' 'கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்க மாட்டாங்க...' 'மொத்தம் 10 பேர்...' 'பத்தே நிமிஷம் தான்...' - பட்டப்பகலில் நடந்த துணிகரம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Behindwoods News Bureau | Dec 09, 2020 10:55 PM

பீகார் மாநிலத்தில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் 14 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bihar 14 kg of gold looted at gunpoint in broad daylight

பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் பராபஜாரில் உள்ள கடைக்குள் இன்று காலை 10.30 மணியளவில் வழக்கம் போல கடை திறக்கப்பட்டு பணியாளர்கள் வேளையில் ஈடுபட்டிருந்த சமயம், கையில் துப்பாக்கி  ஏந்திய பத்து மர்ம நபர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். பணியாளர்களை சுட்டுக் கொன்று விடுவதாக மிரட்டிய அவரகள், அங்கிருந்த ரூ. 5 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் கல்லாவில் இருந்த பணத்தினை கொள்ளையடித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

மொத்த சம்பவமுமே பத்து நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டதாக் சுனில் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.

கொள்ளையர்கள் அனைவரும் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என கூறப்படுகிறது. நகைகளை மூட்டை கட்டிக்கொண்டு அந்த கும்பல் தெருவில் தப்பி ஓடிய சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ காட்சிகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Tags : #JEWELERY #GUN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bihar 14 kg of gold looted at gunpoint in broad daylight | India News.