'திருமணமான ஒரே மாதத்தில்'... 'புதுப்பெண்ணுக்கு நேர்ந்த நடுங்கவைக்கும் சம்பவம்'... 'கடைசிவர விடாம போராடினதால தான்'... 'இளைஞர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 10, 2020 08:24 PM

சிவகாசி அருகே திருமணம் ஆன ஒரே மாதத்தில் புதுப்பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sivakasi Newly Wed Woman Murdered By Youths For Gold Chain

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பெரியார் காலனியில் திருமணமாகி 1 மாதமே ஆன பிரகதிமோனிகா (24) என்ற இளம்பெண் கடந்த 8ஆம் தேதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுதொடர்பாக அதே தெருவில் எதிர் வீட்டில் வசித்துவரும் 2 இளைஞர்களிடம் போலீசார் நேற்று இரவு விசாரணை நடத்தியதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

விசாரணையில், எதிர் வீட்டில் புதிதாக திருமணம் ஆன பெண் ஒருவர் உள்ளதால், அவரிடம் நிறைய நகைகள் இருக்குமென அவர்கள் திட்டம் தீட்டி கொள்ளை அடிக்கச் சென்றது தெரியவந்துள்ளது. அவர்கள் கொள்ளை அடிக்கச் சென்றபோது, மோனிகா நகையை விடாமல் தொடர்ந்து போராடியதால், ஆத்திரமடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவருடைய கழுத்தில் வெட்டியுள்ளனர்.

பின்னர் 1 பவுன் செயினை பறித்துக்கொண்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி, வீட்டிற்கு சென்று நகை, அரிவாளை மறைத்து வைத்துவிட்டு வழக்கம்போல வெளியே சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இளைஞர்கள் 2 பேரையும், கொலை செய்ய உடந்தையாக இருந்த அவர்களில் ஒருவருடைய தாயையும் கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sivakasi Newly Wed Woman Murdered By Youths For Gold Chain | Tamil Nadu News.