'வெடித்துப் பிளந்த சாலைகள்'.. கலங்கடிக்கும் உயிர் பலி.. பதற வைத்த நிலநடுக்கம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 24, 2019 07:19 PM

பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் உலகளவில் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது.

Pakistan Azad Kashmir after Earthquake of magnitude 6.1

ரிக்டர் அளவுகோலில் 6.2 மேக்னிட்டியூடு பதிவாகியுள்ள நிலையில், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன; ஏராளாமன கட்டடங்களும் சிதைந்துள்ளன. மேலும் இந்த நிலநடுக்கத்தில் 5 பேர் வரை தற்போது உயிரிழந்திருக்கலாம் என்றும் சுமார் 50 பேர் படுகாயம் அடைந்திருக்கக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான லாகூரில் ஏற்பட்ட நிலநடுக்கம், அங்கிருந்த இந்தியாவின் தலைநகர் டெல்லி வரை உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் எண்ணற்ற கார்கள் இடர்ப்பாடுகளில் சிக்கிக் கொண்ட சம்பவங்களும், சாலைகளில் உண்டாகியுள்ள விரிசல்களும் புகைப்படங்களாக வலம் வருகின்றன.

Tags : #PAKISTAN #EARTHQUAKE