“ஏரியாவுல 100க்கும் மேல ஷூக்களை காணும்.. கையும் களவுமா பிடிச்சுட்டேன்!”.. இளைஞரின் வைரல் போஸ்ட்... திருடுனது யார் தெரியுமா? உறைந்து போன மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jul 29, 2020 09:18 PM

ஜெர்மனியில் 100க்கும் மேற்பட்ட ஷூக்கள் காணாமல் போன விவகாரத்தில் தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.

Germany Man found Fox Steals more than 100 shoes in Berlin

ஜெர்மனியில் பெர்லினுக்கு அருகில் உள்ள zehlendorf பகுதியில் மக்கள் வீடுகளுக்கு வெளியே கழட்டிவிட்டும் 100க்கும் மேற்பட்ட ஷூக்களை யாரோ திருடிச் செல்வதாக ஊரே பரபரப்பாக இருந்துள்ள சூழலில், அப்பகுதியைச் சேர்ந்த  Christian Meyer என்கிற நபர் தனது ஷூ காணாமல் போனதை பற்றி அப்பகுதியின் பொது நோட்டீஸ் போர்டில் தகவலாக ஒட்டினார்.

பின்னர்தான், அவருக்கு, தமது ஷூக்கள் மட்டுமல்லாது, ஏரியாவில் உள்ள அத்தனை பேரின் ஷூக்களும் காணாமல் போனதை அவர் அறிந்தார். பின்னர் தனது சீரிய முயற்சியால், திருடனை கையும் களவுமாக, ஒரு ஜோடி ஷூக்களுடன் பிடித்தும் ‘திருடன் சிக்கிட்டான்’ என போட்டோவுடன் பதிவிட்டதில்தான் ஆச்சரியம் நிலவியது.

ஆம், அந்த திருடன் ஒரு நரி. அந்த நரிதான் 100க்கும் மேற்பட்ட ஷூக்களை திருடிச் சென்று ஓரிடத்தில் மறைத்து வைத்து வந்துள்ளது. அதனை கண்டுபிடித்த Christian Meyer, அனைவரின் ஷூக்களையும் மீட்டுக் கொடுத்தாலும்,

தனது ஷூக்கள் கிடைக்காமல் தவித்துதான் வருகிறார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Germany Man found Fox Steals more than 100 shoes in Berlin | World News.