Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top

உக்ரைனில் இருந்து வந்த பெண்ணுடன் காதல்.. மனைவியை தவிக்க விட்டு வெளியேறிய கணவர்.. "4 மாசத்துல அப்படியே தலை கீழ ஆயிடுச்சு"

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Sep 28, 2022 01:48 PM

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக, உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா, தொடர்ந்து பல்வேறு இடங்களில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

england man leave his family for ukraine refugee left lover now

Also Read | "உயிரோட இருக்குறவங்கள விட இறந்தவங்க அதிகம்".. அமைதியான நகரம்.. 1000 கல்லறைகளுக்கு ஒருவர் கணக்கு.. சில்லிட வைக்கும் பின்னணி!!

பதிலுக்கு உக்ரைனும், எதிர் தாக்குதலை நடத்தி தீவிரமாக போர் புரிந்தும் வருகிறது. இதனால், உக்ரைன் முழுவதும் பதற்றமான சூழ்நிலை தான் உருவான வண்ணம் உள்ளது.

இதனிடையே, உக்ரைனில் இருந்து இங்கிலாந்துக்கு அகதியாக சென்ற பெண் ஒருவர் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

england man leave his family for ukraine refugee left lover now

ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்ததும் உக்ரைனில் இருந்து தப்பி பிரிட்டனுக்கு சென்றார் இளம் பெண் Sofia Karkadym. இவருக்கு Bradford பகுதியில் வாழும் Tony மற்றும் அவரது மனைவி Lorna ஆகியோர் தங்களின் வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மத்தியில், சோபியா வீட்டிற்கு வந்த பத்து நாட்களுக்குள் அவரிடம் டோனிக்கு காதல் உருவாகி உள்ளது.

england man leave his family for ukraine refugee left lover now

இருவருக்கும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியதால், தனது மனைவி லோர்னா மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு, சோபியாவுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் டோனி.  10 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்து வந்த கணவர், பத்தே நாட்கள் பழக்கமான பெண்ணுடன்  சென்று தன்னை தனியாக தவிக்க விட்டதால் நொந்து போனார் லோர்னா.

இதனையடுத்து, டோனி மற்றும் சோபியா ஆகிய இருவரும் கடந்த பல மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது ஒரு பெரிய ட்விஸ்ட் ஒன்று அரங்கேறி உள்ளது. இருவருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் உருவாக, சோபியாவை பிரியவும் டோனி முடிவு செய்துள்ளார். இனி சோபியாவுக்கு தன் வாழ்வில் இடமில்லை என்றும் அவர் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

england man leave his family for ukraine refugee left lover now

இதற்கு மத்தியில், டோனி வீட்டு கதவை உதைத்து உள்ளே செல்லவும் சோபியா முயற்சிகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. போலீசாருக்கு இது பற்றி டோனி தகவல் தெரிவிக்க, அவர்கள் அங்கு வந்து சோபியாவை கைது செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் எச்சரித்து அவரை விடுதலை செய்த நிலையில், தனது காதலனுடன் இணைந்து வாழ வேண்டுமென சோபியா விரும்புகிறார். ஆனால், அவர் வேண்டாம் என்பதில் டோனி தீர்மானமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மறுபக்கம், தன்னை தவிக்க விட்டு சென்ற கணவர் மற்றும் அவரது காதலி குறித்த விவகாரம் அறிந்த லோர்னா, இந்த உறவு நீடிக்காது என்பது ஏற்கனவே தெரியும் என்றும், ஆனால் நான்கு மாதங்களில் முடிவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே போல, ஒரு மில்லியன் ஆண்டுகள் ஆனாலும், தனது கணவர் டோனிக்கு தனது வாழ்க்கையில் இனி இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

england man leave his family for ukraine refugee left lover now

உக்ரைனில் இருந்து அகதியாக வாழ்ந்த பெண்ணுக்காக குடும்பத்தை உதறி விட்டு வந்த கணவர், தற்போது காதலியையும் ஒதுக்கியுள்ள விஷயம் இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Also Read | "எது, சுவத்துல இருந்து ரத்தம் கசியுதா?".. இளம்பெண் பகிரந்த வீடியோவால்.. பரபரப்பான இணையம்!

Tags : #ENGLAND #MAN #FAMILY #UKRAINE REFUGEE #LOVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. England man leave his family for ukraine refugee left lover now | World News.