‘ஒட்டுமொத்த மனிகுலத்துக்கும் பொதுவான எதிரி அது’... ‘ஆனால், நீங்க பண்றது துஷ்பிரயோகம்’... ‘சீறிப் பாய்ந்த வெளியுறவுத் துறை’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 23, 2020 05:38 PM

கொரோனா தொற்று தொடர்பாக ஜெர்மனி இழப்பீடு கேட்டநிலையில், சீனா மீது அமெரிக்கா வழக்கு தொடர்ந்து உள்ளதை அடுத்து சீனா தனது டிராகன் பாய்ச்சலைக் காட்டியுள்ளது.

China calls virus lawsuit brought by US state very absurd

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எங்கள் நாட்டுக்கு 149 பில்லியன் யூரோ டாலர்கள் இழப்பீட்டினை சீனா எங்களுக்கு வழங்க வேண்டும் என ஜெர்மனி நாடு பகிரங்கமாகக் கோரிக்கை வைத்தது. அதேபோல், வைரஸ் எப்படிப் பரவியது என்பதைக் கண்டுபிடிக்க விசாரணைக் குழு ஒன்றை சீனாவுக்கு அனுப்ப இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்தது. ஜெர்மனி, அமெரிக்கா மட்டுமின்றி கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் எகிறும் மரண எண்ணிக்கைகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டுவரும் பல நாடுகளும் சீனா மீது கடும் கோபத்தை காட்டி வருகின்றன.

இதற்கிடையில், சீனாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் மிசோரி மாகாணம், tழக்கு ஒத்றை தொடுத்தன் மூலம், கொரோனா வைரஸ் தாக்குதல் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் முதலில் வழக்கு போட்ட மாகாணம் என்ற பெயரையும் பெற்றது. இந்நிலையில் ஜெர்மனி வெறுப்பை உமிழ்வதாகவும், உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு தீவிரத்தொற்று நோய்க்குக் குறிப்பிட்ட ஒரு நாட்டைக் குறை கூறி இழப்பீடு கேட்பது மோசமான செயல் என்றும், இது அயல்நாட்டு வெறுப்பையும், தேசியவாதத்தையும் தூண்டும் செயல் எனவும் சீனா விமர்சித்துள்ளது.

கொரோனா வைரஸ் தோன்றியது எவ்வாறு என்பதைக் கண்டறிவதற்கான அமெரிக்க விசாரணைக் குழு வருமானால் அதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பில் சீன வெளியுறவுத் துறை அளித்திருக்கும் விளக்கத்தில், இந்த கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பொதுவான எதிரி.  உலகின் எப்பகுதியிலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தோன்றியிருக்கலாம். எஞ்சிய நாடுகளைப் போலவே சீனாவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சீனா குற்றவாளிகள் அல்ல. வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு அதை உருவாக்கியதாகக் கூறுவது உண்மையல்ல.

அதே நேரம் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர சீனா எடுத்த முன்மாதிரியான முயற்சிகளையும் அதில் கிடைத்த மதிப்புமிக்க அனுபவத்தையும் நாங்கள் உலக சமுதாயத்தின் முன்பு வெளிப்படுத்தியதற்காக எங்களைச் சர்வதேசம் பாராட்டியதை நினைவில் கொள்ள வேண்டும்.

2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நிதி நெருக்கடிதான் உலகளாவியப் பொருளாதார நெருக்கடியாக மாறியது.இதற்கு அமெரிக்காதான் பொறுப்பேற்க வே.ண்டும் என யாராவது கேட்டார்களா?'' என்றும் சீனா தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறியதாவது, அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு உண்மை மற்றும் சட்டபூர்வமானது இல்லை. இது அபத்தமானது. இந்த வழக்கு தீங்கிழைக்கும் துஷ்பிரயோகமாகும். இது சர்வதேச சட்டத்தில் சமமான இறையாண்மையின் அடிப்படை சட்டம் மற்றும் கொள்கையை மீறுகிறது.

தொற்றுநோய்களில் சீன அரசாங்கத்தின் பதில் அமெரிக்க நீதிமன்றங்களின் எல்லைக்குட்பட்டது அல்ல. இதுபோன்ற கட்டுப்பாடுகள் துஷ்பிரயோகம் செய்வது அமெரிக்காவில் உள்நாட்டில் தொற்றுநோய்க்கு பதிலளிப்பதற்கு உகந்ததல்ல என்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு எதிரானது என்றும் ஜெங் கூறினார். முதலில் இந்த இரண்டு கோரிக்கைகளையுமே சீனா சிறிதும் சட்டை செய்யவில்லை. தற்போது இந்த விஷயத்தில் சீனா தனது பாய்ச்சலை காட்டியுள்ளது.