darbar USA others

‘அடுத்தடுத்து’ மோதிக்கொண்ட ‘9 வாகனங்கள்’... நொடிப்பொழுதில் ‘பனிமூட்டத்தால்’ நிகழ்ந்த ‘கோர’ விபத்து...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 14, 2020 12:30 PM

வாலாஜாப்பேட்டை அருகே அடுத்தடுத்து 9 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Valajapettai Accident 1 Dead In 9 Vehicle Collision

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையை அடுத்த கடப்பந்தாங்கல் சுங்கச்சாவடி அருகே வேலூரில் இருந்து சென்னை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அதிக பனிமூட்டம் காரணமாக பின்னால் வந்த கார் ஒன்று அந்த லாரியின் மீது மோதியுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த 9 வாகனங்கள் திடீரென நிற்க முடியாமல் ஒன்றோடொன்று மோதிக்கொண்டுள்ளன.

இந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயடைந்துள்ளனர். மேலும் இதில் மோதிக்கொண்ட 9 வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த விபத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வாலாஜாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்ட ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் காந்தி மற்றும் அமைச்சர் நிலோபர் கபில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

Tags : #ACCIDENT #RANIPET #VALAJAPET #FOG #COLLISION #POGI