BREAKING: தமிழகத்தில் 4,100 பேர் மீது வழக்குப்பதிவு!... 400க்கும் மேற்பட்டோர் கைது!... காவல்துறை அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 27, 2020 01:59 PM

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 4,100 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

tn police files 4100 cases against people violating curfew

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்தார். அத்திவாசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், வைரஸின் வீரியம் பற்றி அறியாமல், பொதுமக்கள் பலர் ஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதனால், தேவையின்றி வெளியே சுற்றித்திரிவோரிடம் காவல்துறையினர் பல முறை எச்சரித்தனர்.

எனினும், போதிய விழிப்புணர்வு இல்லாத சிலர், தொடர்ந்து வெளியே சுற்றுவதால் காவல் துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் விளைவாக, தமிழக காவல் துறை நேற்று முன்தினம், 1252 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். நேற்று 2,848 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போதய நிலவரப்படி மொத்தம் 4,100 பேர் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 417 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.