VIDEO: 'யாரெல்லாம் வந்து கேட்கிறார்களோ அவங்க எல்லார்க்கும் உணவு கிடைக்கனும்!'... அம்மா உணவகத்தில் 'இட்லி' சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Apr 01, 2020 02:14 PM

நோயின் தீவுரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுவதாகவும், மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

tn cm eps had breakfast in amma unavagam at santhome

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், உணவகங்கள் முறையாக செயல்படுகின்றனவா? உணவு தரமாக வழங்கப்படுகிறதா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென ஆய்வு செய்தார்.

சென்னை சாந்தோம் மற்றும் கலங்கரை விளக்கத்தில் உள்ள அம்மா உணவகங்களுக்கு இன்று காலை சென்ற முதல்வர், அங்கு இட்லி வாங்கி சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார். சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்றும் பார்வையிட்டார். அப்போது அங்கு இருந்து ஊழியர்களிடம், "உணவு நன்றாக உள்ளது. யாரெல்லாம் வந்து கேட்கிறார்களோ அவர்கள் எல்லாருக்கும் உணவு கிடைக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாள்தோறும் நான்கரை லட்சம் பேர் அம்மா உணவகங்களில் உணவு சாப்பிடுவதாக தெரிவித்தார்.

டெல்லி மத நிகழ்வில் பங்கேற்று ஊர் திரும்பியவர்கள் தாமாக முன்வந்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட முதல்வர், இஎம்ஐ வசூலிப்பதை தள்ளிவைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார். கோவையில் ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அறிகுறி இருந்தால் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.