“இனி நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் இதை செய்வார்கள்!”.. 'ரஜினி' தொடர்பாக ‘வருத்தம்’ தெரிவித்த சீமான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sivasankar K | Dec 30, 2020 01:45 PM

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்றும், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் தன்னை மன்னிக்குமாறு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Seeman felt sad for talking about rajinikanth in political aspects

ரஜினிகாந்த், வரும் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக கூறியிருந்த நிலையில், தற்போது இத்தகைய முடிவை அறிவித்துள்ளார். ரஜினி ரசிகர்கள் பலரும் ரஜினியின் இந்த முடிவு மீதான தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாலும், ரஜினியின் உடல்நலம் தான் முக்கியம் என்று மனதை தேற்றிக் கொள்ளவும் செய்கின்றனர்.

Seeman felt sad for talking about rajinikanth in political aspects

இதனிடைடே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  “அரசியல் ரீதியாக ரஜினிகாந்தை கடுமையாக பேசியிருந்தால் வருந்துகிறேன்” என்றும் “இனி நாம் தமிழர் பிள்ளைகளும் ரஜினியை கொண்டாடுவார்கள்” என்றும் அறிவித்துள்ளார்.

ALSO READ: “உண்மையில் நீங்கள் இங்கொரு மாற்றத்தை விரும்பினால்... இதை செய்யுங்கள்...!” - ரஜினியிடம் உருக்கமான கோரிக்கை வைத்த பிரபல திரைப்பட இயக்குனர்!

Seeman felt sad for talking about rajinikanth in political aspects

அண்மையில், “ரஜினியையும் கமலையும் அடிக்குற அடியில (விமர்சன ரீதியாக) விஜய் உட்பட எந்த நடிகனுக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற எண்ணம் வராது!” என்று சீமான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Seeman felt sad for talking about rajinikanth in political aspects | Tamil Nadu News.