நள்ளிரவில்.. சமையலறை சென்ற மனைவி.. அடுத்த கொஞ்ச நேரத்தில் கேட்ட கணவரின் 'அலறல்' சத்தம்.. அதிர்ச்சியில் உறைந்த 'கிராமம்'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Aug 17, 2022 10:04 PM

நள்ளிரவில், தூங்கிக் கொண்டிருந்த நபர் திடீரென அலறியடித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அக்கம் பக்கத்தினருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.

ranipet wife doubt on husband affair pours water

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியை அடுத்த புதுப்பட்டு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும், பிரியா என்ற பெண்ணுக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி உள்ளது.

தங்கராஜ் - பிரியா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும் தங்கராஜ் பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்படி ஒரு சூழ்நிலையில், சமீப காலமாக கணவர் தங்கராஜ் நடத்தையில், மனைவி பிரியாவுக்கு சந்தகேம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தங்கராஜ் வேலை பார்க்கும் இடத்தில் பணிபுரியும் பெண் ஒருவருடன் அவர் நெருக்கமாக இருப்பதன் பெயரில், கணவன் மனைவி இருவரும், கடந்த ஒரு மாதமாக அடிக்கடி தகராறு போட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

வேறு பெண்ணுடன் கணவர் அடிக்கடி போன் பேசுவதாக மனைவி பிரியா சந்தேகமும் கொண்டுள்ளார். இதன் பெயரில், கணவரை கண்டித்த பிரியா, இதனை விட்டு விடும் படியும் கணவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருந்த போதும், கணவர் மீதிருந்த சந்தேகம் பிரியாவுக்கு ஓயவில்லை. தொடர்ந்து, இருவரும் சண்டை போட்டு வந்த நிலையில், சமீபத்தில் அதிர்ச்சி முடிவு ஒன்றை பிரியா எடுத்துள்ளார்.

கணவர் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில், சமையலறை சென்ற பிரியா, தண்ணீரை கொதிக்க வைத்து, நன்றாக தூங்கிக் கொண்டிருந்த தங்கராஜ் உடலில் ஊற்றியுள்ளார். தூக்கத்தில் இருந்த தங்கராஜ் மனைவியின் செயலால் அலறித் துடிக்கவே, அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கே வந்துள்ளனர்.

தொடர்ந்து, தங்கராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். அவரது உடலில், காயங்கள் அதிகம் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

வேறு பெண்ணுடன் கணவர் பழகி வந்ததாக வந்த சந்தேகத்தின் பெயரில், சூடு தண்ணியை எடுத்து அவர் மீது மனைவி ஊற்றியுள்ள சம்பவம், அப்பகுதியில் கடும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Tags : #HUSBAND #WIFE #RANIPET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ranipet wife doubt on husband affair pours water | Tamil Nadu News.