காட்டுக்குள் கிடந்த இளம்பெண் சடலம்.. CCTV கேமராவில் சிக்கிய முன்னாள் காதலன்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Nov 10, 2022 09:03 PM

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே இளம்பெண்ணை கொலை செய்ததாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Ranipet Man arrested in ex girlfriend death case

Also Read | "கடைசில ஜாஹீர்கான் சொன்னது உண்மைதான் போல".. இந்தியா - இங்கிலாந்து மேட்ச் பார்த்துட்டு டிவில்லியர்ஸ் போட்ட பரபர ட்வீட்..!

வாலாஜாபேட்டை தடுப்பணை அருகே உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக வாலாஜாபேட்டை காவல்துறையினருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போலீசார் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் IPS உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து காவல்நிலையங்களில் பதிவான காணாமல் போனவர்கள் குறித்து கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Ranipet Man arrested in ex girlfriend death case

அதன் பலனாக மீட்கப்பட்ட இளம்பெண் காவேரிப்பாக்கம் ராமாபுரம் பகுதியை சேர்ந்த ரேஷ்மாலதா என்பது தெரியவந்தது. ரேஷ்மாலதாவிற்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணமான நிலையில் கணவருடன் தகராறு ஏற்பட்டதால் பெற்றோருடன் அவர் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 22 ஆம் தேதி மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டினரிடம் கூறிவிட்டு ரேஷ்மாலதா சென்றதாக தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து தடுப்பணை அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவருடன் ரேஷ்மாலதா பைக்கில் பயணிப்பது அதில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணையில் இறங்க ரேஷ்மாலதா உடன் பைக்கில் சென்றது விஷாரம் பகுதியை சேர்ந்த குமரன் என்பது தெரியவந்திருக்கிறது. குமரனுக்கு தற்போது திருமணமான நிலையில் அதற்கு முன்பே ரேஷ்மாலதாவும் அவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த ரேஷ்மாலதாவுடன் குமரன் நெருங்கி பழகிவந்ததாக சொல்லப்படுகிறது.

Ranipet Man arrested in ex girlfriend death case

இதனிடையே கடந்த 22 ஆம் தேதி அணைக்கட்டு பகுதிக்கு ரேஷ்மாலதாவை அழைத்துச் சென்ற குமரன் அங்கே அவரை கொலை செய்துவிட்டு நகை மற்றும் செல்போனுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து பெங்களூருவில் பதுங்கி இருந்த குமரனை செல்போன் சிக்னல் மூலமாக டிராக் செய்து காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Also Read | இறுதிப்போட்டியில் நுழைந்த இங்கிலாந்து.. இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல சேனல்.. குஷியில் ரசிகர்கள்..! T20WorldCup22

Tags : #RANIPET #MAN #ARREST #EX GIRLFRIEND #EX GIRLFRIEND DEATH CASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ranipet Man arrested in ex girlfriend death case | Tamil Nadu News.