BGM Shortfilms 2019

‘போர்வையில் சுற்றிக் கிடந்த தாயின் உடல்’.. ‘அதிர்ந்துபோன அக்கம்பக்கத்தினர்’.. ‘மகன் செய்த அதிர்ச்சிக் காரியம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 12, 2019 09:04 PM

தூத்துக்குடியில் இறந்த தாயின் உடலை குப்பைத் தொட்டியில் வீசிய மகனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Man throws mothers dead body in dustbin in Thoothukudi

தூத்துக்குடி தனசேகரன் நகர் பகுதியில் மெயின் ரோட்டில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து அங்கு வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த சடலம் அதே பகுதியைச் சேர்ந்த வசந்தி (55) என்பவருடையது எனத் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் மகன் முத்துலெட்சுமணன் (35) என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரித்துள்ளனர்.

அப்போது அவர், “எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவருடைய உடலை அடக்கம் செய்ய பணம் இல்லை. ஏற்கெனவே அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுவிட்டேன். இறுதிச் சடங்குக்கு பணம் இல்லாததால் அவருடைய சடலத்தைக் குளிப்பாட்டி போர்வையில் சுற்றி குப்பைத் தொட்டியில் வீசினேன்” எனக் கூறியுள்ளார்.

முத்துலெட்சுமணன் கூறியதுதான் உண்மையா? அல்லது இதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா எனப் போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயின் உடலை மகன் குப்பையில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MOTHER #DEADBODY #DUSTBIN #SON #SHOCKING #MONEY