“எனக்கு ஒரு பதில் சொல்லு!” .. நம்பி நெருங்கி வந்த காதலி!.. ‘எதிர்பாராத விதமாக’ காதலன் செய்த நடுங்க வைக்கும் காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 19, 2020 08:01 PM

கோவையை அடுத்த பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்கிற பால் வியாபாரியின் மகள் 18 வயதான ஐஸ்வர்யா. அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயதான ரித்தீஷ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதால் இருவரும் செல்போன் மூலம் காதலை வளர்த்து வந்தனர்.

man kills girlfriend after she refused to talk over phone

ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் விவகாரம் ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு தெரிய வர அவர்களும் ஐஸ்வர்யாவிடம் காதலை கைவிட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினர். அவர்கள் சொன்னது போலவே ஐஸ்வர்யாவும் வேறு வழியின்றி ரித்தீஷ் உடனான காதலை துண்டித்துக் கொண்டார். மேலும் அவரை சந்திப்பதையும் அவருடன் உரையாடுவதையும் தவிர்த்து வந்தார்.‌ ஆனால் ஐஸ்வர்யா உடனான காதலை புதுப்பிக்க ரித்தீஷ் பல முறை முயற்சி செய்து வந்த நிலையில் ஐஸ்வர்யா அவருடைய போனை எடுக்காததால் ரித்தீஷ் ஆத்திரம் அடைந்துள்ளார்.

இதனால் கடைசி முயற்சியாக இரவு 9 மணிக்கு ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு சென்ற ரித்தீஷ் வீட்டு வாசலில் நின்றபடி ஐஸ்வர்யாவிடம், “என்னை ஏன் வெறுக்கிறாய்? என் காதலை ஏற்றுக்கொள்” என்று வற்புறுத்தி உள்ளார். இதற்கு ஐஸ்வர்யா மறுக்க இருவர் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ரித்திஷ் தான் மறைத்து எடுத்து வந்திருந்த கத்தியால் ஐஸ்வர்யாவின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார்.

கத்தி குத்து வாங்குவதும் வலி தாங்க முடியாமல் ஐஸ்வர்யா அலறித் துடித்துள்ளார். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஐஸ்வர்யாவின் தந்தை சக்திவேல் ஓடிவர, அவரையும் ரித்தீஷ் கத்தியால் குத்திவிட்டு ரித்தீஷ் ஓடிவிட்டார். இதனால் சக்திவேலின் கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவான ரித்தீஷை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : #LOVER #POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man kills girlfriend after she refused to talk over phone | Tamil Nadu News.