"DEALING எல்லாம் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்'ல தான்.." இளைஞர்கள் செய்து வந்த காரியம்.. பரபரப்பில் மதுரை

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jul 13, 2022 06:55 PM

மதுரை திருப்பரங்குன்றம் அருகே அமைந்துள்ளது பசுமலை என்னும் பகுதி. இந்த பகுதியைச் சுற்றி ஏராளமான இளைஞர்கள் செய்து வரும் காரியம் குறித்து பரபரப்பு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

madurai youngsters dealing through facebook and instagram

Also Read | "உலகின் முதல் கர்ப்பிணி மம்மி'ய ஆய்வு செஞ்சப்போ.." மிரண்டு போன ஆராய்ச்சியாளர்கள்.. "2000 வருசத்துக்கு முன்னாடியே இப்டி நடந்துருக்கா??"

அதாவது இன்ஸ்டாகிராம் மூலம், அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சேர்ந்து மிகவும் அதிர்ச்சிகரமான செயல் ஒன்றில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மதுரை ஜம்புரோபுரம் மார்க்கெட் பகுதியில் இளைஞர்கள் சிலர், இன்ஸ்டாகிராம் வாயிலாக சக இளைஞர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதுடன், இதன் மூலம் போதை பொருட்களை விற்பனை செய்து வந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், இன்ஸ்டாகிராம் வழியாக லொக்கேஷன் வசதியை பயன்படுத்தி, மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில், இளைஞர்களை வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து, போதை பொருளை சிறிது சிறிதாக, சுமார் 50 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக, மாநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், தல்லாகுளம் காவல் ஆணையர் மற்றும் ஆய்வாளர் உள்ளிட்டோர், தனிப்படை ஒன்றை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து, இறுதியில் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அவர்களிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ போதை பொருள், இருசக்கர வாகனம் மற்றும் 3 செல் போன் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த மூன்று இளைஞர்களும், அப்பகுதியில் உள்ள பலருக்கு போதை பொருளை விற்பனை செய்து வந்ததும் உறுதியானது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுரையை சுற்றியுள்ள இளைஞர்களுக்கு இன்ஸ்டா மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்கள் மூலம் போதை பொருளை விற்பனை செய்து வந்ததாகவும், நம்பர் யாருக்கும் தெரியாது என்பதால் எளிதில் கண்டுபிடிக்க கூட முடியாது என்பதற்காக இப்படி விற்பனை செய்து வந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம், மதுரை பசுமலை பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | சல்மான் கானை கொலை செய்ய 4 லட்சம் ரூபாய்க்கு துப்பாக்கி??.. பீதியை ஏற்படுத்திய குற்றவாளியின் வாக்குமூலம்??.. அதிர வைக்கும் பின்னணி

Tags : #MADURAI #YOUNGSTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Madurai youngsters dealing through facebook and instagram | Tamil Nadu News.