4 மாசத்துக்கு முன் காணாமல்போன இளைஞர்.. சிக்க கூடாதுன்னு நண்பர் போட்ட பக்கா பிளான்.. சினிமாவை மிஞ்சிய ட்விஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Dec 16, 2022 10:16 PM

மதுரையில் 4 மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன இளைஞர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் மதுரை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Madurai Man Arrested for slayed his Friends after 4 months

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பட்டணம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி வள்ளி. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான பெரியசாமிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, திருவாதவூர் முக்கம்பட்டியை சேர்ந்த அவருடைய நண்பர் தமிழரசன் என்பவர் பெரியசாமியை ஜாமீனில் எடுக்க வள்ளிக்கு உதவியிருக்கிறார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் இருவருக்குள்ளும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே பெரியசாமி சிறையில் இருந்து விடுதலை ஆகி வீட்டுக்கு வந்திருக்கிறார். அவருக்கு மனைவியின் திருமணத்தை மீறிய உறவு குறித்து தெரியவந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி தனது நண்பர்களிடத்தில் இதுபற்றி பேசியிருக்கிறார். பின்னர் தமிழரசனை பழிவாங்க முடிவெடுத்த பெரியசாமி அவரை கடந்த ஆகஸ்டு 19 ஆம் தேதி குருத்தூர் எனும் இடத்திற்கு வரச் சொல்லியிருக்கிறார்.

அங்கு வந்த தமிழரசனை தனது நண்பர்களுடன் இணைந்து பெரியசாமி தாக்கியதில் அவர் அங்கேயே உயிரிழந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, ஏற்கனவே திருடப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்றில் தமிழரசனின் உடலை கட்டி அங்கிருந்த கிணற்றில் அந்த கும்பல் வீசியிருக்கிறது. அதன்பிறகு தமிழரசனின் குடும்பத்தினர் அவரை தேடி இருக்கின்றனர். இதுதொடர்பாக போலீசில் புகாரும் அளித்திருக்கின்றனர்.

இதனிடையே, வேறு வழக்கில் கைதான பெரியசாமி மீண்டும் சிறைக்குள் சென்றுவிட்டார். தமிழரசன் கொலை வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாது இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பெரியசாமியின் நண்பர் நவீன் என்பவர் மதுபோதையில் இருந்தபோது தமிழரசனை கொலை செய்ததை உளறியிருக்கிறார். இது காவல்துறையினருக்கு தெரியவரவே, உடனடியாக அவரை விசாரித்துள்ளனர். அப்போது, தமிழரசனின் உடலை கிணற்றில் வீசியதை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதனையடுத்து அந்த கிணற்றில் ஆய்வு செய்தபோது சடலம் ஒன்று போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. அது தமிழரசனின் உடல்தான் என உறுதி செய்த போலீசார் உடற்கூறாய்வுக்கு ஏற்பாடு செய்தனர். தமிழரசனை கொலை செய்த வழக்கில் பெரியசாமியின் நண்பர்களான நவீன், அழகேஷ், குணாளன் ஆகிய மூன்று பேரை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில்  தலைமறைவான அழகர் என்பவரை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.

Tags : #MADURAI #POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Madurai Man Arrested for slayed his Friends after 4 months | Tamil Nadu News.