Kaateri logo top

"அய்யோ, டேய் மச்சான்" .. கதறித் துடித்த இளைஞர்.. "அருவி கிட்ட போஸ் கொடுத்தப்போ.." ஒரே செகண்டில் நிகழ்ந்த அசம்பாவிதம்!..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Aug 04, 2022 06:44 PM

அருவி அருகே இளைஞர் ஒருவர்  புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு போஸ் கொடுத்து  கொண்டிருந்த சமயத்தில், திடீரென நடந்த அசம்பாவிதம், கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

kodaikanal youth takes photos and videos in waterfalls

Also Read | "ஹலோ சார், இந்த தெரு பக்கத்துல.." போலீஸுக்கு வந்த போன் கால்.. "ஸ்பாட்'ல போய் பாத்ததும்".. அதிர்ந்த போலீஸ்.. சோதனை பண்ணதுல கெடச்ச ஒரு 'ரசீது'

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அருவி உள்ளிட்ட இடங்களில் நீர் வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.

இதனிடையே, பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் என்பவர், திண்டுக்கல் மாவட்டம், மங்களம்கொம்பு என்னும் பகுதியில், தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அஜய் பாண்டியனின் நண்பர் ஒருவர், அவரை பார்ப்பதற்காக மங்களம்கொம்பு பகுதிக்கு வந்துள்ளார். தொடர்ந்து, நண்பர்கள் இரண்டு பேரும் பெரும்பாறை அருகே அமைந்துள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கே நீர்வீழ்ச்சி அருகே நின்ற படி, அஜய் பாண்டியன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு மிகவும் உற்சாகமாக நின்றுள்ளார்.

மேலே நின்ற படி, அஜயின் நண்பர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துக் கொண்டிருக்க, திடீரென அவர்கள் இருவரும் எதிர்பாராத அசம்பாவிதம் அங்கே அரங்கேறியது. பாறை பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக அஜய் பாண்டியன் கீழே இறங்கி சென்று கொண்டிருக்க, ஒரு கட்டத்தில், பாறையின் மேல் கால் வழுக்கி அவர் நீர் வீழ்ச்சிக்குள் தவறி விழுந்தார்.

இதனைக் கண்டதும், அவரது நண்பர் பதறியடிக்க, மச்சான் மச்சான் என பயத்தில் கத்த, ஒரு சில வினாடிகளில், நீரின் வேகம் காரணமாக, அஜய் பாண்டியன் நீரில் இழுத்து செல்லப்பட்டார். சுமார் 60 அடிக்கு மேல் அவரை நீர் அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு வந்து, அஜய் பாண்டியனை தேட தொடங்கினர். ஆனால், அஜய் பாண்டியன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், மழை தொடங்கியதன் காரணமாக மீட்புப் பணியிலும் தொய்வு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் இன்று அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இளைஞரை நீர் வீழ்ச்சி அடித்து சென்ற சமயத்தில் உள்ள வீடியோ, தற்போது பலரையும் பதற்றத்திற்கு மத்தியில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | மொத்தமா 42 அடிக்கு 'நகம்'.. "பின்னாடி இருக்குற உருக்கமான சபதம்.." கின்னஸ் சாதனை படைச்சும் கண் கலங்கும் பெண்

Tags : #KODAIKANAL #YOUTH #WATERFALLS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kodaikanal youth takes photos and videos in waterfalls | Tamil Nadu News.