'அடுத்த 24 மணிநேரத்தில்’... 'இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை’... வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 07, 2019 09:44 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

heavy rain alert in 8 districts and coastal districts

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தஞ்சை, கடலூர், திருவாரூர், இராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, தென்காசி மற்றும் நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மாலை மற்றும் இரவு சேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags : #RAIN #ALERT #CHENNAI #IMD