‘வெளுக்கும் கனமழை’!.. அடுத்த 6 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 26, 2021 10:02 AM

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Flood alert for 7 districts in Tamil Nadu due to heavy rain

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறு, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

Flood alert for 7 districts in Tamil Nadu due to heavy rain

அதில் அரியலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Flood alert for 7 districts in Tamil Nadu due to heavy rain

அதனால் இந்த 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மாவட்டங்களில் நீர்நிலைகளின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Flood alert for 7 districts in Tamil Nadu due to heavy rain | Tamil Nadu News.