BGM Shortfilms 2019

‘அத்தி வரதர் தரிசனம் முடித்து வெளியே வரும் வழியில்’.. கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 14, 2019 11:50 AM

அத்தி வரதர் தரிசனத்துக்கு வந்த கர்ப்பிணி பெண் கோயில் வளாகத்திலேயே அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

Baby born in Kanchipuram Athi Varadar temple premises

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 வருடங்களுக்கு ஒருமுறை அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். கடந்த மாதம் ஜூலை 1 -ம் தேதி முதல் இன்றுடன் 45 நாள்களாக அத்தி வரதரை பக்தர்கள் தரித்து வருகின்றனர். இன்று சுவாமி ரோஜா நிற பட்டு உடுத்தி செண்பகப்பூ மற்றும் மல்லிகை மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அத்தி வரதரை தரிசிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் அத்தி வரதர் தரிசனத்துக்கு விஜயா என்ற கர்ப்பிணி சென்றுள்ளார். கர்ப்பிணிகளுக்கான சிறப்பு வரிசையில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது விஜயாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அப்பெண்ணிற்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதில் தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #ATHIVARADHAR #TEMPLE #KANCHIPURAM #BABY #BORN