'ஐயா அழாதீங்க ஐயா'...'அழாதீங்க'...கண்ணீர் விட்டு அழுத 'அன்புமணி'...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Apr 11, 2019 03:31 PM
மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில்,தலைவர்களின் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ் கடகத்தூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூடியிருந்த மக்களிடையே பேசிய அன்புமணி திடீரென தன்னை அறியாமல் அழ தொடங்கினர்.இதனால் அங்கு குடியிருந்த தொண்டர்கள்,ஐயா அழாதீங்க என்று அவரை தேற்றினார்கள்.
தொண்டர்கள் முன்னிலையில் அன்புமணி திடீரென அழுதது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் அவர் அழுத வீடியோ காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.
