'தமிழகத்தில்' மேலும் 3 பேருக்கு பாதிப்பு... 'கொரோனா' பாதித்தவர்களின் 'எண்ணிக்கை' 18 ஆக உயர்வு... அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 24, 2020 10:18 PM

தமிழ்நாட்டில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கொரோனா சிகிச்சை எடுத்து வரும் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

3 more new Coronavirus Cases in Tamil Nadu: Minister Vijayabaskar

நியூசிலாந்தில் இருந்து சென்னை வந்த 65 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த 55 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பால், கே.எம்.சி.யில் சேர்க்கப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து வந்த 25 வயது இளைஞர், கொரோனாவால் பாதிப்பு இருந்ததை உறுதி செய்யப்பட்டதை அடுத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : #VIJAYABASKAR #TAMIL NADU #CORONAVIRUS