darbar USA others

'கூலி' வேலை செஞ்சு வாங்கி கொடுத்தேன்... 'டிக் டாக்' காதலால் கர்ப்பமான 'சிறுமி' தீக்குளித்து தற்கொலை... கதறும் பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 14, 2020 12:40 PM

டிக் டாக் காதலால் கர்ப்பம் அடைந்த சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

10th class student suicide police arrested one person

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு சிறுமி ஒருவர் டிக் டாக்கில் வீடியோக்கள் பதிவிட்டு அதிக நேரம் செலவிட்டுள்ளார். இவரது வீடியோக்களை பார்த்த பல்லடத்தை சேர்ந்த வேல்முருகன் என்னும் வாலிபர், சிறுமியுடன் நட்பாக பழகி ஆசை வார்த்தைகள் கூறி அவரை தன்னுடைய ஆசைக்கு பயன்படுத்தி கொண்டார்.

இதனால் சிறுமி கர்ப்பம் அடைய, மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். பெற்றோர்களின் விசாரணையால் மனவேதனை அடைந்த மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து காங்கயம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன்னுடைய டிக் டாக் காதல் குறித்து சிறுமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து வேல்முருகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி சிறுமி கடந்த 27-ம் தேதி பரிதாபமாக பலியானார்.

இதையடுத்து டிக் டாக்கை தடை செய்ய வேண்டும். வேல்முருகன் ஜாமீனில் வெளிவந்தால் எங்களுக்கு ஆபத்து. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திருப்பூர் கலெக்டரை சந்தித்து சிறுமியின் பெற்றோர் மனு அளித்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், ''செல்போன் மூலம் படிக்க வேண்டும் என்று மகள் கேட்டதால், கூலி வேலை செய்து வாங்கி கொடுத்தோம். தற்போது அந்த செல்போனே மகளின் உயிரைப் பறித்து விட்டது,'' என்று கண்ணீருடன் கூறினர்.

Tags : #POLICE