‘அடுத்து வரும் இந்தப் போட்டியில்’... ‘களமிறங்கும் சிக்சர் மன்னன்’... ரசிகர்கள் மகிழ்ச்சி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Oct 25, 2019 01:41 PM

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான யுவராஜ் சிங், அபுதாபியில் நடைப்பெறும் டி 10 கிரிக்கெட் லீக் போட்டியில் முதன் முதலாக பங்கேற்று விளையாட உள்ளார்.

Yuvraj to play in Abu Dhabi T10 tournament maratha arabians

இந்திய அணி வீரரான யுவராஜ் சிங், தனது ஓய்வுக்குப் பிறகு, வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில், இந்திய கிரிக்கெட் வாரிய அனுமதியுடன் பங்கேற்று விளையாடி வருகிறார். அண்மையில், கனடாவில் நடைப்பெற்ற குளோபல் டி20 லீக்கில் விளையாடினார்.

இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் 14 முதல் 24-ம் தேதி வரை அபுதாபியில் டி 10 லீக் போட்டியின் 3-வது சீசன் நடைபெற உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும், இந்தத் தொடரில், மராத்தா அராபியன்ஸ் அணிக்காக யுவராஜ் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல வீரரான பிராவோ (கேப்டன்), மலிங்கா உள்ளிட்ட வீரர்கள் உள்ளநிலையில், யுவராஜ் சிங் இந்த அணியில் பங்கேற்று விளையாட உள்ளார். 

இதுகுறித்து கூறியுள்ள யுவராஜ் சிங், ‘எனக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியாகும். ஏனெனில் சர்வதேச அளவில் நான் பங்கேற்கும், டி10 இதுவாக இருக்கும். மேலும் அங்குள்ள ரசிகர்களின் ஆதரவு மற்றும் உற்சாகம், எனக்கு எப்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : #YUVRAJSINGH #T10 #ABUDHABI #SIXERS