மூணாவது 'டெஸ்ட்'ல நடந்த அதே 'சர்ச்சை'.... மீண்டும் 'சீண்டிய' ரசிகர்கள்... "என்ன தான்யா உங்களுக்கு பிரச்சன??..." 'சர்ச்சை'யை கிளப்பிய 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Jan 15, 2021 10:03 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் ஆரம்பமானது.

siraj labelled a grub by gorup of fans in fourth test

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்களான சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் ஃபீல்டிங் செய்த போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறியை தூண்டும் வகையில் சில வார்த்தைகளால் அவர்கள் இருவரையும் சீண்டினர்.

இதன் காரணமாக, போட்டி சில நிமிடம் நிறுத்தப்பட்டு தவறான செயலில் ஈடுபட்ட பார்வையாளர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றினர். ரசிகர்களின் இந்த செயலுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வரும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் நான்காவது போட்டியின் முதல் நாளிலும் சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை சேர்த்து 'முட்டைப் புழு' என ரசிகர்கள் சீண்டியுள்ளனர். 

 

வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே ரசிகர்கள் அவரை இப்படி சீண்டியது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Siraj labelled a grub by gorup of fans in fourth test | Sports News.