'நான் அப்போவே உங்கள வார்ன் பண்ணேன்...' 'இப்படி பண்ணாதீங்கன்னு...' நியாபகம் இருக்கா...? - முன்னாள் வீரர் போட்ட பதிவு...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Feb 09, 2021 09:49 PM

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பின்பு எச்சரிக்கை விடுத்தது நினைவில் இருக்கிறதா என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பதிவிட்டுள்ளார்.

Kevin Pietersen remembers warned after the aus test series

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் படுதோல்வி குறித்து பீட்டர்சன் கூறியிருப்பதாவது,

"ஆஸ்திரேலியாவை தோற்கடித்தபோது நிறைய கொண்டாட வேண்டாம் என நான் எச்சரிக்கை விடுத்தது நினைவில் இருக்கிறதா இந்தியா" என்று பதிவிட்டுள்ளார் பீட்டரச்ன்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு இந்திய வீரர்களின் கொண்டாட்டம் குறித்து பீட்டர்சன் பதிவிட்டபோது,

"நிறைய தடைகளைத் தாண்டி கிடைத்த இந்த வெற்றியைக் கொண்டாடுங்கள் இந்தியா. ஆனாலும் உண்மையான அணி இன்னும் சில நாள்களில் இந்தியாவுக்கு வரவுள்ளது. அவர்களை நீங்கள் தோற்கடித்தாக வேண்டும். எச்சரிக்கையுடன் இருங்கள். அடுத்த இரு வாரங்களுக்கு அதிகமாகக் கொண்டாடுவதைத் தவிர்த்து விடுங்கள்." இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kevin Pietersen remembers warned after the aus test series | Sports News.