'இந்த' மாதிரி பண்றவங்கள 'வச்சுக்கிட்டு'... நான் 'என்ன' செய்றது?... கடுப்பான கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 12, 2020 01:13 AM

நேற்றைய போட்டியில் நியூசிலாந்திடம் பெற்ற தோல்வியின் மூலம் ஏகப்பட்ட மோசமான சாதனைகளை இந்திய அணி படைத்துள்ளது. குறிப்பாக 31 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி ஒயிட் வாஷ் அடைந்து மட்டமான சாதனை செய்துள்ளது. இதனால் கேப்டன் விராட் கோலி தன்னுடைய கேப்டன் பதவியை விட்டுக்கொடுப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

IND Vs NZ: Virat Kohli talks about India\'s Whitewash

இந்த நிலையில் இந்தியாவின் மோசமான தோல்விக்கான காரணம் குறித்து கோலி வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், '' மூன்று போட்டிகளும் மோசம் என்று சொல்ல முடியாது. பேட்ஸ்மேன்கள் கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டும் பார்முக்கு திரும்பினர். நாங்கள் செய்த மோசமான பீல்டிங் மற்றும் எங்களின் பந்துவீச்சு வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இந்த தொடரில் விளையாடிய இளம்வீரர்களுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.

எங்களை விட நியூசிலாந்து மிகத் தீவிரமாக விளையாடினார்கள். எங்களை ஒயிட்வாஷ் செய்ய அவர்கள் தகுதியானவர்கள். நாங்கள் டெஸ்ட் தொடரை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தற்போது டெஸ்டில் பேலன்ஸ் அணியாக திகழ்கிறோம். டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என நினைக்கிறோம். எனினும், சரியான மனநிலையில் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும்,'' என்றார்.