legend updated

‘கர்ப்பத்தை கலச்சிரு’.. ‘மறுத்த இளம்பெண்’.. கள்ளக்காதலால் நடந்த விபரீதம்..! வெளியான திடுக்கிடும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Aug 04, 2019 12:48 PM

பெங்களூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Woman killed due to extra marital affair in Bengaluru

பெங்களூரு ஹாசன் மாவட்டத்தில் உள்ள சென்னராயப்பட்டணா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தோப்பில் கடந்த மாதம் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண் குறித்த தகவல் கிடைக்காததால் பெண்ணின் புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டு போலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் அப்பெண் தனது மகள்தான் என போலிஸாரிடம் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனை அடுத்து பெண்ணின் செல்போனைக் கைப்பற்றிய போலிஸார், அவர் யாருடன் பேசியுள்ளார் என்பது குறித்து விவரங்களை சேகரித்துள்ளனர். அப்போது அத்தையின் கணவர் சீனிவாசு என்பவருடன்( தந்தையுடன் பிறந்த தங்கையின் கணவர்) அடிக்கடி பேசியது தெரியவந்துள்ளது.

இதனால் சீனிவாசுவிடம் போலிஸார் விசாரணை நடத்தியுள்ளார். முதலில் மறுத்த அவர் போலிஸாரின் தீவிர விசாரணையை அடுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். சீனிவாசுவுக்கும், அப்பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்ததாவும், இதில் அப்பெண் கர்ப்பம் தரித்ததாகவும் போலிஸார் நடத்திய விசாரணை தெரியவந்துள்ளது. இதனால் அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சீனிவாசுவை வற்புறித்தியுள்ளார்.

இதனை அடுத்து சென்னராயப்பட்டணா பகுதியில் உள்ள தோப்புக்கு வருமாறு அப்பெண்ணை சீனிவாசு அழைத்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே திருமணம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சீனிவாசு அப்பெண்ணை தோப்பில் வைத்து கொலை செய்ததாக போலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #WOMAN #KILLED #BENGALURU #AFFAIR