“பேய் ஓட்டுவதாகக் கூறி கணவனின் கண் முன்னே குரூரமாக தாக்கிய மந்திரவாதி!”.. துடிதுடித்து உயிரிழந்த இளம் பெண்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 05, 2020 05:58 PM

தெலுங்கானாவில் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மந்திரவாதியால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Telangana Woman dies in brutal exorcism ritual sorcerer arrested

கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜிதா என்கிற 24 வயதான அப்பெண் மல்லேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில் ரஜிதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

அவருக்கு பேய் பிடித்ததாக நினைத்த மல்லேஷ், உள்ளூர் மந்திரவாதி ஷாம் என்பவரை அழைத்து வர, ஷாம், ரஜிதாவுக்கு பேய் ஓட்டுவதாகக் கூறி ரஜிதாவின் தலைமுடியை பிடித்து கன்னத்தில் அறைந்ததுடன் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

அந்த சமயத்தில் கட்டிலில் தலை இடித்ததில் மயங்கிய ரஜிதா, துடிதுடித்து உயிரிழந்ததால், மந்திரவாதி ஷாம் மற்றும் ரஜிதாவின் உறவினரை போலீஸார் கைது செய்ததுடன், தலைமறைவான ரஜிதாவின் கணவர் மல்லேஷை தேடி வருகின்றனர்.

Tags : #TELANGANA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Telangana Woman dies in brutal exorcism ritual sorcerer arrested | India News.