தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கிலிட்டு வீடியோ எடுத்த இளைஞர்கள்! கர்ப்பிணி யானை சம்பவத்தை தொடர்ந்து இன்னொரு கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 30, 2020 04:56 PM

தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில், கிராமத்துக்குள் புகுந்த குரங்குக் கூட்டத்துக்கு பாடம் புகட்ட, ஒற்றை குரங்கை தூக்கிலிட்டு இளைஞர்கள் கொடுத்த கொடூர தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

monkey hanged to death, telangana youth atrrested

சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் கர்ப்பிணி யானை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இந்நிலையில் இதேபோல் தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் அம்மாபாலம் கிராமத்துக்குள் குரங்குக் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்து வந்ததை அடுத்து, குரங்குகளுக்கு பாடம் புகட்டுவதற்காக மொத்தமாக வலைவிரித்த இளைஞர்களிடம் ஒரு குரங்கு அகப்பட்டுக் கொண்டது.

இதனை அடுத்து அந்த குரங்கை தண்ணீரில் மூழ்கடித்தும், ஒற்றைக் கயிறை, குரங்கின் கழுத்தில் கட்டி, மரத்தில் தொங்கவிட்டு தூக்கிலிட்டுள்ளனர். இதில் குரங்கு துள்ளத் துடிக்க இறந்துப்போனது. இதனை அந்த இளைஞர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து விரைந்து சென்ற வனத்துறையினர், இந்த கொடூரச் செயலை செய்தவர்கள் மீது வழக்குப் பதிந்து 3 பேரை கைது செய்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Monkey hanged to death, telangana youth atrrested | India News.