'மூக்கு வழியா குழாயை விட்டு...' 'சூடா காற்றை செலுத்தி...' 'எப்பா சாமி...'கொரோனா சிகிச்சையை விட...' 'இது எவ்வளவோ பெட்டர்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | May 14, 2020 03:23 PM

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடலுறுப்புகள் செயலிழந்து கடினமான சிகிச்சைகளை மேற்கொள்வதைவிட தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து நோய்த் தொற்றிலிருந்து விலகியிருப்பதே சாலச்சிறந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Prevention is better than corona treatment-Doctors says

கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்துவதற்கு என்று சிகிச்சை இல்லாத நிலையில் செயல் இழக்கும் உள்ளுறுப்புகளை பாதுகாக்க மருத்துவர்கள் சில தீவிரமான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் இந்த சிகிச்சைமுறைகள் கைகொடுக்காமல் உயிரிழப்பில்  சென்று முடிந்துவிடுகிறது.

தற்போதை நிலையில், நோய் அறிகுறிகளை எதிர்த்து போராடுவதும், உறுப்புகளின் செயல்பட்டை தீவிரமாக பராமரிப்பதும்தான் ஒரே வழியாக இருக்கிறது. இதன்மூலம் மட்டுமே இறப்பு வீதத்தை குறைக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.

உதாரணமாக கொரோனா பாதிப்பு முற்றிய நிலையில் ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரித்து விடுகிறது. இதனால் ரத்தத்தை வடிகட்டுவதற்கு ஒரு செயற்கை கல்லீரல் சுத்திகரிப்பு அமைப்பு  தேவைப்படுகிறது. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த நிலை மேலும் மோசமாக்கி விடும். அவர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சையே வழியாக உள்ளது.

கடுமையாக பாதிக்கப்பம் நுரையீரல் செயல்பாட்டை நீட்டிப்பதற்கு, சுவாச குழாயில் ஒரு குழாயை செருகி காற்று செல்வதற்கு வழி ஏற்படுத்தப்படும். மேலும், மூக்கில் ஒரு குழாய் வழியாக சூடான மற்றும் ஈரப்பதமான ஆக்சிஜனை செலுத்தப்படும். இவை போன்ற நிலைகள் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்குள் நேர்ந்து விடலாம். இப்படி கடினமான, சவாலான பாதைகளை கடந்து செல்வதை விட, நோய்த் தொற்றிலிருந்து விலகியிருப்பதே தற்போதைய சூழலில் மிக எளிதான வழியாக உள்ளது.

தற்காப்பு கவசங்கள், முக கவசம், தனிமனித இடைவெளிகளை தவறாமல் பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுதல் போன்ற எளிமையான வழிகளின் மூலமாக கொரோனா என்ற எதிரி நம்மை அண்ட விடாமல் தடுக்கலாம். இதைத் தவிர வேறு நிவாரணம் இல்லை!