'127 நாடுகளுக்கு' மருந்து வழங்கப் போகும் 'இந்தியா'!.. 'கொரோனா' பலி 3 லட்சத்தை நெருங்கிய நிலையில் அமெரிக்க நிறுவனத்தின் 'அதிரடி முடிவு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 14, 2020 08:19 AM

இந்தியாவின் 4 கம்பெனிகளுக்கு அமெரிக்காவின் ஜில்லியாட் நிறுவனம், லைசன்ஸ் அல்லாத ரெம்டெசிவிர் மருந்தினை பேட்டண்ட் இல்லாமலே உருவாக்கிக் கொள்வதற்கான கூடு ஒப்பந்தத்தை செய்து தந்துள்ளது.

covid19: Indian companies got royalty free rights to make remdesivir

ஜூபிலியண்ட் லைஃப் சைன்ஸஸ். சிப்லா, ஹெட்ரோ லேப்ஸ், மைலன் என்.வி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் சுமார் 127 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தவற்கான மருந்தை இந்தியாவின் 4 கம்பெனிகளுக்கும் பாகிஸ்தானின் ஒரு கம்பெனி உட்பட 5 கம்பெனிக்கும் ஜில்லியாட் சைன்ஸஸ் கொரோனாவுக்கு எதிரான மருந்தினை உருவாக்கும் வாய்ப்பினை அளித்துள்ளது.

குறிப்பாக உலக சுகாதார அமைப்பு கோவிட்-19 பாதிப்பினை உலக தொற்றாக அறிவித்தது முதல் முடித்துக்கொள்ளும் வரையில் இந்த ரெம்டெவிசர் மருந்துக்கான ராயல்டியினை பெறப்போவதில்லை என ஜில்லியாட் அறிவித்துள்ளது. உலகில் இதுவரை கொரோனா தொற்றுக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாகியுள்ள நிலையில், இப்படியான அறிவிப்பினையும் முனைப்பினையும் ஜில்லியாட் கையில் எடுத்துள்ளதும், இத்தகைய கொடிய நோய் சிகிச்சைக்கான மருந்தினை இந்திய கம்பெனிகளுக்கு கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.