"புள்ளைக்கு என்னப்பா பேரு வைக்குறது?"... "இது கொரோனா 'சீசன்'ல"... நல்லா 'ட்ரெண்ட்' ஆகுற மாதிரி 'பெயர்' வைத்த பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 15, 2020 01:51 PM

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா சம்மந்தப்பட்ட பெயர்களை பெற்றோர்கள் தாப்ரோது சூட்டி வருவது அதிக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Parents from UttarPradesh named his son as \'Sanitizer\'

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாவட்டம் சஹரன்பூர் மாவட்டத்தில் புதிதாக பிறந்த குழந்தைக்கு 'சானிடைசர்' என பெயர் சூட்டியுள்ளனர். இதுகுறித்து அந்த குழந்தையின் தந்தை ஓம்வீர் சிங் கூறுகையில், 'கொரோனா என்னும் கொடிய வைரசிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள சானிடைசரை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். மேலும் மக்கள் வருங்காலத்தில் கொரோனா வைரஸ் குறித்து பேசும்போது சானிடைசரை நினைவு கூறுவர். அதனால் இந்த பெயரை என் மகனுக்கு வைத்தேன்' என்கிறார்.

இந்த பெயரை அறிவித்ததும் மருத்துவ பணியாளர்கள் சிரிக்க ஆரம்பித்தனர் என குழந்தையின் தாய் குறிப்பிட்டார். முன்னதாக சட்டீஷ்கர் மற்றும் மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா, கோவிட், லாக்டவுன் போன்ற பெயர்களை குழந்தைகளின் பெற்றோர்கள் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.