7 வருஷமா மனைவியின் சமையலில் மறைந்திருந்த ரகசியம்.. கிச்சனில் கேமரா மாட்டிய கணவனுக்கு.. தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 07, 2022 02:55 PM

கேரளா: சுமார் 7 வருடங்களாக தன் கணவருக்கு கொடுக்கப்பட்ட உணவில் மனைவி செய்து வந்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kerala Wife mixed medicine in food for husband 7 years

மலிவு விலைக்கு பைக் இருக்கு, வேணுமா? ஃபேஸ்புக் நண்பன் போட்ட மாஸ்டர் பிளான்.. திடீர்னு கழுத்தில் வைக்கப்பட்ட துப்பாக்கி.. என்ன நடந்தது?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ் சங்கர் ஐஸ்கீரிம் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு ஆஷா என்பவரை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இரு மகள்கள் உள்ளனர்.

சாப்பிட்ட உடன் வரும் தூக்கம்:

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சதீஷ் தினமும் இரவு உணவு அருந்தியவுடன் தூக்கம் வந்துவிடுமாம், அதோடு உடல் சோர்வும் இருந்துள்ளது. சர்க்கரை நோயின் காரணமாக தனது உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக முதலில் நினைத்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார. இருந்தாலும், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையாம். இந்த பிரச்சனை சுமார் 7 வருடங்களுக்கு மேலாக இருந்துள்ளது.

ஹோட்டலில் சாப்பிட்ட கணவர்:

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹோட்டலில் ஒரு நாள் சாப்பிட்டுள்ளார். ஆனால், அன்று அவருக்கு உடல் சோர்வோ அல்லது துக்கம் சீக்கிரம் வரும் பிரச்சனை ஏற்படவில்லை. இதனை கவனித்த சதிஷ், சுமார் 20 நாள் வீட்டில் சாப்பிட வேண்டாம் என முடிவு செய்து வெளியில் சாப்பிட்டு வந்துள்ளார். அப்போது தான் அவருக்கு வீட்டு சாப்பாட்டில்தான் ஏதோ பிரச்சனை உள்ளது என உணர்ந்துள்ளார்.

Kerala Wife mixed medicine in food for husband 7 years

ரகசிய கேமராவில் தெரிய வந்த உண்மை:

இதனால் தன் வீட்டு சமையலறையில் ரகசிய கேமரா வைத்து கண்காணிக்க தொடங்கியுள்ளார். அப்போது தான் அவரின் மனைவி உணவில் எதோ ஒரு திரவத்தை கலப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மனைவி உணவில் தூக்க மாத்திரை கலந்துக்கொடுக்கிறாரா என்ற சந்தேகம் அடைந்த சதிஷ், உடனடியாக தன் மனைவியின் நெருங்கிய தோழியை சந்தித்து தனது பிரச்சனைகளை கூறியுள்ளார். அதோடு, என் மனைவியிடம் பேசி சந்தேகத்தை தீர்க்குமாறு கூறியுள்ளார்.

தோழியின் கணவருக்கும் கொடுக்க பரிந்துரை:

அப்போது தான் ஆஷா தன் கணவர் சதிஷிற்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் தூக்க மாத்திரை கொடுத்து வருவது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், தோழியின் கணவருக்கும் இந்த மாத்திரை கொடுக்க பரிந்துரை செய்ததோடு, இதனை கொடுத்தால் தான் கணவன் நம் சொல்படி இருப்பார்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.

தீவிர விசாரணை:

இந்நிலையில், சதீஷ் தன் மனைவி மீது பாலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆஷாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, 'தன் கணவர் சதிஷ் தன்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் செக்ஸ் டார்சர் கொடுத்தார். வீட்டில் எப்போதும் கடுமையாக நடப்பார். அவரது கொடுமைகளை பொறுக்க முடியாமல் மனநலம்  பாதிப்புக்கு பயன்படுத்தும் மாத்திரையை கொடுத்தேன்.' என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதோடு, ஆஷா தன்னுடைய மூத்த மகளிடம், அப்பா இந்த மருந்தை சாப்பிட்டால் தான் கடுமையாக நடந்துக்கொள்ள மாட்டார். அவர் நோயில் இருந்து குணமாக இந்த மருந்தை கொடுப்பதாக கூறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோட்டோரம் கிடந்த சூட்கேஸ்.. காலையில் வாக்கிங் போக வந்தவர்கள் கண்ட நடுங்க வைக்கும் காட்சி

Tags : #KERALA #WIFE #MEDICINE #FOOD #MIXED MEDICINE IN FOOD #HUSBAND #கேரள மாநிலம் #மனைவி #கணவர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala Wife mixed medicine in food for husband 7 years | India News.