என் புருஷன் வீட்ல இல்ல.. வெளியூர் போயிருக்காரு.. அந்த நேரம் பார்த்து மனைவி எடுத்த முடிவு.. உடைந்து நொறுங்கிய கணவன்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 04, 2022 03:00 PM

கொல்லம்: கேரளத்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவருக்கு தெரியாமல் இரு பிள்ளைகளையும் தனியே விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kollam mother left two children and went to illegal affair

நாளுக்கு நாள் கணவன் மனைவி உறவு கசந்து விவாகரத்து ஒருபுறம் நடக்கிறது என்றால், மற்றொருபுறம் தங்கள் இணைக்கு தெரியாமல் மற்றொரு உறவுக்குள் செல்வதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொலை, தற்கொலை உள்ளிட்ட அதீத காரியங்களில் ஈடுபடவும் தயங்குவதில்லை. தன் இணையின் கள்ள உறவு குறித்து கேள்விப்படும் போது உடைந்து நொறுங்கி போகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடந்துள்ளது.

மாதம் ஒருமுறை (அ) இருமுறை ஊருக்கு செல்வது வழக்கம்:

கேரள மாநிலம் கொல்லம் புனலூர் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான சின்னு. இவரின் கணவர் தமிழகத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். சின்னு தன் இரு மகள்களுடன் கேரளாவில் வசித்து வருகிறார். சின்னுவின் கணவர் மாதத்திற்கு இரண்டு முறை அல்லது ஒருமுறை கேரளாவிற்கு வந்து குழந்தைகள் மற்றும் மனைவியை பார்த்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியே இருக்கும் சின்னுவுக்கும் கொல்லம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டதுள்ளது.

கள்ளகாதலனுடன் சேர்ந்து எடுத்த முடிவு:

இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. மேலும், இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து சின்னு தன் கணவரிடம் எதுவும் தெரிவிக்காமல், இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடியுள்ளார்.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் குழந்தைகள் தனியே இருப்பதை பார்த்து அதன் பின்னர் சின்னுவின் கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த சின்னுவின் கணவர் உடைந்து நொறுங்கி போனார். மேலும், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அனாதையாக தவித்த இரண்டு குழந்தைகளும் உறவினர்கள் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். சின்னு கடந்த 6 மாதங்கள் ஆகிய நிலையில் தற்போது அவர் திருச்சூரில் கள்ளக்காதலனுடன் இருப்பது தெரியவந்ததுள்ளது.

கைது செய்து விசாரணை:

இந்நிலையில் சின்னு இருக்கும் இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு பெண் குழந்தைகளையும் தனியே விட்டு தாய் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KOLLAM #ILLEGAL AFFAIR #WIFE #கொல்லம் #மனைவி #கணவன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kollam mother left two children and went to illegal affair | India News.