legend others

‘மனைவி கேட்ட அந்த ஒரு கேள்வி’.. ஆத்திரத்தில் மூக்கை கடித்து வைத்த கணவன்..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 19, 2019 04:26 PM

பர்சில் இருந்த பணம் காணாமல் போனது குறித்து கேட்ட மனைவியின் மூக்கை கடித்து வைத்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Husband bite his wife\'s nose for money in Ahmedabad

குஜராத் மாநிலம் கோடாசர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா குல்வானி(40). இவர் அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது கணவர் கைலாஷ் குமார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கைலாஷ் குமார் சில நாட்களாக வேலையின்றி வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரேஷ்மா குல்வானி தனது பர்சில் வைத்திருந்த ரூ.3000 காணாமல் போனது தொடர்பாக கைலாஷ் குமாரிடம் விசாரித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கைலாஷ் குமார் தனது மனைவியை தாக்கி அவரின் மூக்கை கடித்துள்ளார். இதனால் வலியில் துடித்த ரேஷ்மா குல்வானியின் சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கைலாஷ் குமாரிடம் இருந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு ரேஷ்மா குல்வானியின் மூக்கில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் 15 தையல்கள் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் தாக்கியது தொடர்பாக ரேஷ்மா குல்வானி அளித்த புகாரின் பேரில் கைலாஷ் குமாரை போலிஸார் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #AHMEDABAD #WIFE #BITES #NOSE #HUSBAND