"இது ரொம்ப பலவீனமா இருக்கு..." "மரபணுவில் வேறுபாடு இருக்கிறது..." "32 டிகிரி வெயிலில் அழிந்து விடும்..." 'நம்பிக்கை' தரும் 'மருத்துவர்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 31, 2020 10:49 AM

32 டிகிரி வெயிலில் கொரோனா அழிந்து விடும் என்பதால் கொரோனா வைரசால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என ஹைதராபாத் மருத்துவர் டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Corona will be destroyed in 32 degrees sun-doctor hope

இந்தியாவில்  இதுவரை 1139 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் வரை பலியாகி உள்ளனர். மஹாராஷ்ட்ரா, கேரள மாநிலத்தில் தான் அதிகமான பாதிப்பு இருக்கிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரசால் மக்கள் பீதி அடைய வேண்டாம், இதைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஹைதராபாத் மருத்துவர் ஒருவர் தெரிவித்து உள்ளார். ஆசிய இரப்பை குடலியல் அமைப்பின் தலைவரும், ஹைதராபாத் மருத்துவருமான டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி இதுதொடர்பாக கூறியதாவது, "நாங்கள் இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்தோம். இது ஆர்.என். ஏ. வகையைச் சேர்ந்த வைரஸ் ஆகும். இந்த வைரஸ் வலுவாக இருக்கும்போதே பரவத்தொடங்கியது. சீனாவில் தோன்றிய போதும், மற்ற நாடுகளுக்கு பரவ தொடங்கியபோதும் அதன் மரபணு மாறியதை நாங்கள் கண்டறிந்தோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சீனா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள இந்த வைரசின் மரபணுவுக்கும், இந்தியாவில் உள்ள வைரஸ் மரபணுவுக்கும் வேறுபாடு இருக்கிறது. 'ஸ்பைக்' புரதத்தில் மாறுபாடு இருக்கிறது. அங்கு வலுவாக இருந்தது. இந்தியாவில் பலவீனமாக இருக்கிறது.

இத்தாலி, சீனா, அமெரிக்காவில் பரவிய வைரஸ் வீரியம் மிக்கதாக இருந்ததால் அதிகமான பாதிப்பு இருந்தது. மேலும் இத்தாலியில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களே இறந்தனர். அவர்கள் பெரும்பாலும் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள்.

இந்தியாவில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இந்த வைரஸ் பலவீனமானது என்பதால் மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். கொரோனா வைரஸை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று அதிகமாக இருக்காது.

இந்தியாவில் ஏப்ரல் மாதம் சராசரியாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். இந்த வெப்பத்திற்கு கொரோனா வைரஸ் நீண்ட நாள் இருக்காது. இதனால் நாம் அதை கட்டுப்படுத்திவிடலாம். 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு நீட்டிப்பு இருக்காது என்றே என்னுடைய கணிப்பாகும்." எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA #HYDRABAD #SUNLIGHT #DOCTOR HOPE