கணவரின் போனுக்கு வந்த மனைவியின் வீடியோ.. லட்சக்கணக்கில் பறிபோன பணம்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Dec 17, 2022 04:27 PM

கர்நாடக மாநிலத்தில் தனது மனைவியின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனக்கு அனுப்பி மிரட்டல் விடுத்தவர் மீது கணவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

Case registered on wife and his friend over threaten husband

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இளைஞருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து இருவரும் ஒன்றாக வசித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் கணவரின் வாட்சப் நம்பருக்கு புதிய எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருக்கிறது. மேலும், அவரது மனைவியின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அந்த மர்ம நபர் அனுப்பி இருக்கிறார்.

Case registered on wife and his friend over threaten husband

மேலும், பணம் கேட்டு மிரட்டிய அந்த மர்ம நபர் பணத்தை கொடுக்கவில்லை என்றால் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறார். இதனால் அச்சமடைந்த அந்த கணவரும்  4.5 லட்ச ரூபாயை அந்த மர்ம நபர் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பி இருக்கிறார். இதனையடுத்து மீண்டும் அந்நபர் மிரட்டலில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனிடையே, தனது மனைவியின் புகைப்படங்கள் எப்படி வேறு ஒருவருக்கு கிடைத்திருக்கும் என அவருக்கு சந்தேகம் வரவே இதுகுறித்து நாசிக் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். உடனடியாக காவல்துறையினர் இதுகுறித்த விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் இளைஞரின் மனைவியும் அவரது முன்னாள் காதலரும் இணைந்து இந்த சதித் திட்டத்தை நடத்தியிருப்பது காவல் துறையினருக்கு தெரிய வந்திருக்கிறது. மேலும் திருமணத்திற்கு பின்னரும் தனது முன்னாள் காதலருடன் இளம்பெண் பழகி வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Case registered on wife and his friend over threaten husband

இதனையடுத்து இருவர் மீதும் கணவர் போலீசில் புகார் அளிக்க இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் நாசிக் போலீசார். காதலனுடன் இணைந்து தனது அந்தரங்க புகைப்படங்களை கணவருக்கு அனுப்பி மனைவியே பணம் பறித்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MAHARASHTRA #COUPLE #POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Case registered on wife and his friend over threaten husband | India News.