"'நைட்'டோட நைட்டா வீட்ட மொத்தமா ஆட்டைய போட்றனும்..." 'திருடன்' போட்ட 'ஸ்கெட்ச்',,.. ஆனா அப்புறம் நடந்தது தான் 'ஹைலைட்டே'... 'திருட' போன வீட்டில் நடந்த 'காமெடி'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Sep 16, 2020 07:30 PM

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள லக்கவரம் (Lakkavaram) என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி. இவர் அப்பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

andhrapradesh thief went to stole from house sleep there arrested

இந்நிலையில், நேற்று இரவு ஸ்ரீனிவாஸ் ரெட்டி வீட்டுக்குள் புகுந்த திருடன் ஒருவன், அவரது படுக்கை அறைக்குச் சென்று அவர் தூங்க வருவதற்கு முன்னாள் அங்கிருந்த கட்டிலின் கீழே சென்று ஒளிந்து கொண்டுள்ளான். அது மட்டுமில்லாமல், ஸ்ரீனிவாஸ் ரெட்டி தூங்கியதற்கு பின், வீட்டிலுள்ள நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்லலாம் என திருடன் திட்டம் போட்டுள்ளான்.

ஆனால், நேற்று வசூலான பணம் முழுவதையும், ஸ்ரீனிவாஸ் ரெட்டி எண்ணி முடித்து விட்டு தூங்க நேரமாகியுள்ளது. இதனிடையே, திருடி போக வேண்டி கட்டிலுக்கு அடியில் காத்திருந்த திருடன் தூங்கி விட்டான். அப்போது திடீரென கட்டிலின் கீழ் இருந்து குறட்டை சத்தம் வருவதைக் கேட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி அதிர்ந்து போயுள்ளார். வீட்டிற்குள் திருடன் நுழைந்ததை உறுதி செய்த ஸ்ரீனிவாஸ் ரெட்டி, உடனடியாக தனது அறையில் இருந்து வெளியே சென்று அறையை தாளிட்டார்.

பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் அறையில் இருந்த திருடனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Andhrapradesh thief went to stole from house sleep there arrested | India News.